தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கோணம்-சேலம் மெமு விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி

Advertisement

அரக்கோணம்: பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்ட அரக்கோணம்-சேலம் மெமு விரைவு ரயில் இன்று முதல் மீண்டும் இயங்க தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை வழியாக சேலம் வரை மெமு விரைவு மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் அரக்கோணத்தில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணியளவில் புறப்பட்டு சேலத்திற்கு காலை 10.30 மணிக்கு சென்றடையும். பின்னர் சேலத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 8.45 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ரயிலை கடந்த 8ம்தேதியன்று முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டபோது, பராமரிப்பு காரணமாக மெமு ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் தடையில்லாமல் இயக்க பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையேற்று இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. அதன்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலத்திற்கு இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement