தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும்

அரக்கோணம் : அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் ராமாபுரம், மேட்டுசித்தாம்பாடி, சித்தாம்பாடி கண்டிகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் சித்தாம்பாடி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு ஏரிக்கரையை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த ஏரிக்கரை மேல் ஏற்கனவே சாலை வசதி உள்ளது. ஆனால், தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனை, வேலைகளுக்கு செல்வர்கள், ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்கி செல்பவர்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், அவசர நேரத்தில் இந்த வழியை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக சித்தாம்பாடி ஏரிக்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement