தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரக்கோணம் நகரில் ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்

*பைக் திருடும் சிசிடிவி காட்சி வைரல்

Advertisement

அரக்கோணம் : அரக்கோணம் நகரில் ஹெல்மெட் அணிந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 பைக்குகளை ஹெல்மெட் அணிந்த 3 மர்ம நபர்கள் திருடிச்செல்வது போன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகி, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பைக் திருட்டில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சுவால்பேட்டை பகுதியை சேர்ந்த 2 நபர்கள் ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 பைக்குகள் திருடு போனது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அரக்கோணம் பகுதியில் தொடர் ஹெல்மெட் கொள்ளையர்களின் அட்டகாசம் நடந்து வருகிறது. சமீபத்தில், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய ஆசிரியையின் கழுத்தில் இருந்து தாலிச்சரடை ஹெல்மெட் கொள்ளையன் பறித்து சென்ற சம்பவம் நடந்ததுள்ளது. இதுபோன்று பல்வேறு சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால், போலீசார் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மேலும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News