தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரபிக்கடலில் மங்களூரு அருகே நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த சரக்கு கப்பல்

உடுப்பி: கர்நாடகா கடற்கரையில் 4வது சர்வதேச கடல்சார் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் கப்பல் தீப்பற்றி எரிந்தது. இதனால், கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி சரக்கு கப்பல் புறப்பட்டது. அரபிக்கடலில் அந்த கப்பல், மங்களூரு அருகே சூரத்கல் கடற்கரையில் இருந்து 33 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்தது.
Advertisement

உடனே, கப்பலுக்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து, இந்திய கடலோர காவல்படையினர், சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்து, கண்காணித்து வருகின்றனர். கப்பல் எரியக்கூடிய திடப்பொருட்களையும் சில திரவங்களையும் கொண்டு செல்கிறது. மீண்டும் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தால் அந்த பொருட்களால் கடலுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

உடுப்பி மாவட்ட கலெக்டர் டாக்டர் வித்யாகுமாரி, நடுக்கடலில் உள்ள கப்பலுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கடலோர காவல்படை, சிஆர்இசட் அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறை மற்றும் துறைமுக அதிகாரசபை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், கொள்கலன் கப்பல் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement