தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊரகத் திறனாய்வுத் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 

Advertisement

சென்னை: ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவியர் திறனாய்வுத் தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு நவம்பர் 29ம் தேதி நடக்கிறது. இந்த திறனாய்வுத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெரும் மாணவ மாணவியரில் தெரிவு செய்யப்படும் மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இ ருந்து 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவியர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1000 வதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

2025-2026 கல்வி ஆண்டில் சென்னை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதியில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் இந்த திறனாய்வுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் 28ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.10 சேர்த்து, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமோ, முதல்வர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

Related News