விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான் என பேசிய அனுராக் தாகூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்
சென்னை : விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான் என பேசிய அனுராக் தாகூர் பேச்சுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல, பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement