தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முன்ஜாமீன் வழக்குகளை விசாரணை நீதிமன்றம் விசாரிப்பதே சரியானது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: முன்ஜாமீன் வழக்குகளை உயர்நீதிமன்றத்தை விட விசாரணை நீதிமன்றம் விசாரிப்பது தான் சரியானதாக இருக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகார் மாநிலத்தில் பாட்னாவில் கடன் பெற்ற ஒருவர் அதனை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்த நபரை கூலிப்படையை வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணை நீதிமன்றத்தை அணுகாமல், அவர் நேரடியாக பாட்னா உயர்நீதிமன்றத்தை நாடி முன்ஜாமின் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு உயர்நீதிமன்றமும் ஒப்புதல் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement

இதையடுத்து மேற்கண்ட பாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,\\”கூலிப்படையை வைத்து கொலை செய்யும் விவகாரங்களில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எந்த விசாரணையும் இல்லாமல் முன்ஜாமீன் வழங்கப்பட்டால், அது கூலிப்படை கலாச்சாரத்தை அதிகரித்து வாய்ப்பாக அமைந்து விடும். இதுபோன்ற முக்கியமான விவகாரங்களில் விசாரணை நீதிமன்றம் முதலில் முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும். எனவே முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்யும் வழக்குகளை முதலில் விசாரணை நீதிமன்றம் விசாரிப்பது தான் சரியானதாகும். எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக பாட்னா உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்கிறோம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement