தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை: கணக்கில்வராத ரூ.1.24 லட்சம் பறிமுதல்

Advertisement

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை போக்குவரத்துதுறை சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத 1 லட்சத்து 24,900 ரூபாயை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து சோத னைச்சாவடி (ஆர்டிஒ செக்போஸ்ட்) உள்ளது. இந்த சோதனை சாவடி ஆந்திரா-தமிழக எல்லையில் உள்ளதால், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும் செல்லும் வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் ஊத்துக்கோட்டை சோதனை சாவடிக்கு வந்து, இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர். அப்போது, பணியில் இருந்த போக்குவரத்து சோதனைச்சாவடி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 24,900 கைப்பற்றப் பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையால் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் பரபரப்பு நிலவியது.

Advertisement

Related News