தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வரும் 29ம் தேதி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்; வேளாங்கண்ணி பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி துவக்கம்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 

நாகை: வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் 29ம் தேதி நடக்கிறது. செப்டம்பர் 7ம் தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது. இதையொட்டி பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி துவங்கியது.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இது கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி பேராலயத்துக்கு பல்வேறு நாடுகள், மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேராயலத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு பேராலய பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடக்கிறது.

செப்டம்பர் 7ம் தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது. இந்த விழா காலங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்வர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடைபயணமாக கிறிஸ்தவர்கள் வந்து செல்வர். ஆண்டு பெருவிழாவையொட்டி பேராலயம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி துவங்கவுள்ளது. இதற்காக சாரம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் பேராலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். மேலும் பேராலயத்துக்கு வருவோரின் நலனை கருத்தில் கொண்டு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

 

Related News