தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

46வது ஆண்டு விழா: 25 ஏழை மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை வழங்கினார் நடிகர் சிவகுமார்

கிருஷ்ணகிரி: சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு 25 மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை நடிகர் சிவகுமார் வழங்கினார். தருமபுரி, விழுப்புரம் பகுதிகளை தொடர்ந்து தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோடகரை தொடக்கப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியரை நியமித்து கல்வி பணிகளை முன்னெடுத்து வரும் 'வாழை' தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1,50,000 நிதி உதவியும் வழங்கினார்.

Advertisement

மூத்த ஓவிய கலைஞர் 'மணியம்' செல்வன் அவர்களின் கலை பங்களிப்பை பாராட்டி அவருக்கு ரூ. 1,00,000 நிதி வழங்கினார். மேலும், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி மேல்நெல்லிமரத்தூரில் அமைந்திருக்கும் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ. 40,000 வழங்கினார். இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ரூ. 1,00.000/- நிதி உதவி வழங்கினார்.

Advertisement