தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணா பல்கலைக்கழக அங்கீகார முறைகேடு: 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது.இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் “சென்டர் பார் அப்பிலியேஷன்” என்ற மையத்தின் மூலமாகவே பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கும் பணி வழங்கப்படுகிறது.

Advertisement

இந்த மையத்தின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், பல பேராசிரியர்கள், முன்னாள் பதிவாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரமானது, கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு, பேராசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஆய்வகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே வழங்கப்பட வேண்டும் .

ஆனால், அங்கீகார மையத்தில் உள்ள இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு , இந்த ஆய்வுகள் முறையாக நடைபெறாமல் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது . பல கல்லூரிகள் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளன . குறிப்பாக, ஒரே ஒரு பேராசிரியர் பல கல்லூரிகளில் நிரந்தரப் பேராசிரியராகப் பணியாற்றுவது போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் 2023-24 காலகட்டங்களில் நடந்திருப்பதாக விசாரணையில் அம்பலமாகி உள்ளது . தமிழ்நாட்டில் உள்ள மொத்த 480 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 47%* ஆகும். தற்போது, லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்கு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement