தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாடு சென்ற அண்ணாமலை: எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது பாஜக

Advertisement

சென்னை: லண்டன் சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.சர்வதேச அரசியல் படிப்பிற்காக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். 3 மாதங்களில் இப்படிப்பை முடித்து, நவம்பர் இறுதியில் இந்தியா திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலை பணிகளை கவனிக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜா தலைமையில் ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர், சக்கரவர்த்தி, எம்.முருகானந்தம், கனகசபாபதி ஆகிய 6 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரது பணிகளை கவனிக்க பாஜகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுக்கும். மாநில தலைவர், ஒருங்கிணைப்பாளரின் வழிகாட்டுதலில் குழுவின் உறுப்பினர்கள் செயல்படவுள்ளனர். 6 பேர் கொண்ட பாஜக மையக்குழுவுடன் ஆலோசித்து, கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைப்பு குழு முடிவெடுக்கும்.

கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவித்துள்ளார்.

Advertisement