தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலையிடம் சீட்டு வாங்கி பாஜ தலைமையை ஏற்கணும்னா நாண்டுக்கிட்டு செத்துடுவோம்: கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை கிராமத்தில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: பாஜ தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவரை எனக்கு எப்போதுமே பிடிக்காது. அவர் ஒரு தறுதலை. ஒரு அகில இந்திய கட்சியின் மாநில தலைவர் எப்படி இருக்காரு பாருங்க... அதிமுக ஏதோ அவரிடம் கூட்டணிக்கு சென்றது மாதிரி...
Advertisement

அவரு சொல்றாரு, இனிமேல் அதிமுக தலைமை ஏற்க நான் விரும்ப மாட்டேன். எங்களிடம் வந்து கேட்டுப் பெறணுமாம். அந்த மாதிரி பொழப்பு வந்தா நாங்க நாண்டுக்கிட்டு செத்துப் போயிடுவோம். நீயெல்லாம் பேசுறதுக்கு உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? அதிமுக வந்து இவர்கிட்ட வந்து கேக்கணுமாம்? இவர்கிட்ட வந்து சீட்டுக்கேட்டு நாம நிக்கணுமாம்? இவங்கதான் தலைமை பொறுப்பாம். என்ன வாய்க்கொழுப்போடு பேசுறாரு? அந்த கட்சியில இவரை வச்ேச ஓட்டலாம்னு பாக்குகிறாங்க.

பேசிப் பேசியே பாரதிய ஜனதாவை ஒண்ணும் இல்லாமலாக்கி, கட்சி காவி நிறத்தையே மாத்தப்போறானுங்க. இதுல 70 ஆண்டு கால திராவிட ஆட்சியை குறை வேறு. எங்கள் ஆட்சிதான் பொற்கால ஆட்சி. அந்த கட்சி உங்கிட்ட வந்து சீட்டு கேட்கணுமா? மத்தியில் ஆள்கிற மமதையில் பேசுறாரு. எவ்வளவு வாய்க்கொழுப்பு? இப்படி பேசிப் பேசியே மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் இருந்த பாரதிய ஜனதா, இன்றைக்கு மைனாரிட்டி அரசாக மாறிப் போயிருக்கு. இப்படிப்பட்ட மாநிலத்தலைவன் இருக்கிறதுனாலதான். இவ்வாறு பேசினார்.

* செல்லூர் ராஜூ மீது போலீசில் பாஜ புகார்

விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் பாஜ கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் குமரேசன் தலைமையில் நேற்று புகார் மனு அளித்தனர். மனுவில், ‘‘மதுரை அருகே நடைபெற்ற அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை பொதுமேடையில் ஒருமையிலும், ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் விமர்சித்துள்ளார். மேலும் தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளில் நாகரிகமின்றி பாஜ மாநில தலைவரை பேசி வருகிறார். எனவே செல்லூர் ராஜூ மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News