தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலையை விசாரிக்கக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி பொறியியல் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தளுக்கு ஆளானார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தன்னிடம் வழக்கு தொடர்பாக ஆதாரங்கள் உள்ளது என்று ஊடகங்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பேசியியிருந்தார்.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். அப்படி என்றால் அவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். ஒருவேலை அவர் பொய்யான தகவலை தெரிவித்திருந்தார் என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், இதுபோன்ற வழக்கால் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் வழக்கறிஞர் எம்.எம்.ரவி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இந்த வழக்கை விசாரிக்க எந்தவித முகாந்திரமும் இல்லை. குறிப்பாக இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement

Related News