தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலையை சந்தித்தது ஏன்? மீண்டும் பாஜவுடன் கூட்டணியா? டிடிவி.தினகரன் பேட்டி

மேட்டுப்பாளையம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி.தினகரனிடம் மீண்டும் கூட்டணியில் இணைய அண்ணாமலை இருமுறை சந்தித்து பேசிவிட்டு டெல்லி சென்றுள்ளார். இதனால், மீண்டும் பாஜ கூட்டணியில் டிடிவி இணைவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அமமுக கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார் என்பதற்காக நாங்களும் அதில் இணைவோமா என்ற கேள்வியே தவறு. நாங்கள் எதற்கு இணைய வேண்டும். அண்ணாமலை என் நண்பர். அண்ணாமலையை சந்தித்தது நட்பு ரீதியிலானது. இதில் அரசியல் இல்லை.கூட்டணியில் சேர அமமுக எந்த நிபந்தனையும் விதிக்காது. மரியாதை அளிக்கும் இடத்தில் அமமுக இடம் பெறும். அமமுக இருக்கும் கூட்டணி தான் வெற்றிபெறும். அதில் நாங்கள் கூட்டணி அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்பு உள்ளது. திமுக வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறும் என கூறுவது எதிர்கட்சிகளின் கூட்டணி பலவீனத்தை வைத்தும், கூட்டணியில் தவறு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் அறைகூவல் விடுகிறார்கள். டிச.10 (இன்று) முதல் வரும் 18ம் தேதி வரை அமமுக சார்பில் தமிழகத்தில் 234 தொகுதி மற்றும் புதுச்சேரியிலும் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News