தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளாரா?: வானதி சீனிவாசன் விளக்கம்

கோவை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு தேர்தல் களப்பணி ஆற்றிய தன்னார்வலர்கள், நிர்வாகிகள் உடனான மோடி 3.0 என்ற கலந்துரையாடல் கூட்டம் மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பு துவக்க நிகழ்ச்சி கோவை வடகோவையில் உள்ள குஜராத் சமாஜத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
Advertisement

எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வானதி சீனிவாசன் பேசுகையில், கோவை உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொகுதி. நான் தேர்தல் சமயத்தில் எந்த மாநிலம் சென்றாலும் கோவையில் ஜெயிச்சிருவீங்க இல்ல, அண்ணாமலை ஜெயிச்சிருவார் இல்ல, இதுதான் மக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. தேர்தலுக்காக எத்தனை பேர் வேலை பார்த்துள்ளோம், தோல்வியால் ஒருவித சோகம் இருக்கும்.

கோவையின் வளர்ச்சியை தவறவிட்டு விட்டார்களே என்ற கோபம்கூட மக்கள் மீது எழும். தம்பி அண்ணாமலை ஒரு நல்ல காரியம் செய்துள்ளார். கட்சிக்காரர்கள் அனைவரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார். இல்லையென்றால் அண்ணாமலை வாய்ஸ் ஆப் கோவை என்று தனியாக ஆரம்பித்துள்ளார். தனியாக கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று ஒரு கதையை சுற்றிவிட்டு இருப்பார்கள். அந்த மாதிரி புரளி கிளப்புபவர்களுக்கு வாயை மூடுவதற்கான வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார். இதனை தொடர்ந்து வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக வானதி சீனிவாசன் பாதியிலேயே கிளம்பினார்.

 

Advertisement

Related News