தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்.. பிற கட்சிகள் குறித்து பொய் செய்தி, அவதூறு பரப்புவதுதான் அவர் வேலை: எடப்பாடி பழனிசாமி!!

கோவை: விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 4-வது இடம் பிடிக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;
Advertisement

அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

அண்ணாமலை மெத்தப்படித்தவர், ஒரு பெரிய அரசியல் ஞானி என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கான காரணத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பாஜக வளர்ந்ததாக மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சி

தான் தலைவரான பிறகு பா.ஜ.க. வளர்ந்துள்ளதாக அண்ணாமலை மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

அதிமுகவை குறைகூறி அண்ணாமலை அரசியல்: பழனிசாமி

அதிமுகவை தொடர்ந்து குறை கூறியே அரசியல் செய்கிறார் என்று எடப்பாடி கூறியுள்ளார்.

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்: பழனிசாமி

அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்; அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை பெற்றுக் கொடுத்தார் என்று கூறினார்.

அதிமுக கார்ப்பரேட் கம்பெனி அல்ல: பழனிசாமி

அதிமுக ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனி அல்ல. பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுப்படியே ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்ணாமலை போன்றவர்களால் தான் மத்தியில் பாஜக பெரும்பான்மையை இழந்தது. எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டபோது ஜானகி எப்படி நடந்துகொண்டாரோ அதேபோல் சசிகலா நடந்துகொள்கிறார். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது பொதுக்குழு முடிவு; மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி கூறியுள்ளார்.

 

Advertisement

Related News