தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்வில் குறைந்த மதிப்பெண்; அண்ணா பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

சென்னை: தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் அதிகளவில் காய்ச்சல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முதலாமாண்டு படித்து வருகிறார். அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த முடிந்த பருவ தேர்வில் மாணவி குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சக மாணவிகள் இரவு உணவு சாப்பிட மாணவியை அழைக்க வந்த போது, அவர் படுக்கை அறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே மாணவிகள் விடுதி வார்டன் உதவியுடன் கிண்டியில் உள்ள கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அதிகளவில் காய்ச்சல் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மாணவி சுயநினைவின்றி இருந்ததால் மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரைப்படி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவமனை அளித்த புகாரின்படி கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement