தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அன்மோல் பிஷ்னோயை டெல்லியில் என்ஐஏ கைது: 11 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட டெல்லி வந்த அன்மோல் பிஷ்னோயை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை, பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கி சூடு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த அன்மோல் பிஷ்னோய் கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் குஜராத் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர். லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி, கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்வதற்கு உதவியாக இருந்தவன் அன்மோல் பிஷ்னோய். கடந்த 2022ல் தலைமறைவான அன்மோல் அமெரிக்கா சென்ற நிலையில், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று டெல்லி வந்தடைந்தார். அவனை டெல்லியில் வைத்து என்ஐஏ கைது செய்தது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்மோலை 11 நாள் என்ஐஏ காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

Advertisement

Advertisement

Related News