தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மறைமலைநகர் ஆஞ்சநேயர் கோயிலில் முப்பெரும் தேவியர் ஆலய கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: மறைமலைநகரில் உள்ள மாருதி சபா ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முருகப்பெருமான் மற்றும் முப்பெரும் தேவியர் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மறைமலைநகரில் எழுந்தருளியுள்ள மாருதி சபா ஆஞ்சநேயர் திருக்கோயிலில் புதிதாக இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக விளங்கும் சரஸ்வதி, காமாட்சி, மஹாலட்சுமி ஆகிய முப்பெரும் தேவியராகிய கன்னிகா பரமேஸ்வரி, வராஹி அம்மன், வைஷ்ணவிதேவி அம்மன்களுக்கும், வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான் தனித்தனி கோயில்களில் சமீபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து, மாருதிசபா ஆஞ்சநேயர் ஆலயத்தில் நேற்று காலை முருகன் மற்றும் முப்பெரும் தேவியர்களின் கோயில்களில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதும், அனைத்து பக்தர்களின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாருதிசபா ஆலய தலைவர் வெங்கடாசலம், துணை தலைவர் துரைராஜ், செயலாளர் ஜவஹர், துணை செயலாளர் அய்யாசாமி, பொருளாளர் பக்தவத்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement