தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அனில் அம்பானியின் கடன் கணக்கு மோசடி என வகைப்படுத்தியதை ரத்து செய்தது கனரா வங்கி: உயர் நீதிமன்றத்தில் தகவல்

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானியின் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்தியதை திரும்பப் பெற்று விட்டதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் கனரா வங்கி தெரிவித்துள்ளது. தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கை 2019 ஜூன் முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமும் இதன் துணை நிறுவனங்களும் பல்வேறு வங்கிகளின் கடன் வாங்கியுள்ளன. இந்நிலையில், கனரா வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்தது.
Advertisement

இந்த நிறுவனத்துக்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வழங்கிய ரூ.1,050 கோடி கடன் தொகையும் இதில் அடங்கும். வங்கியின் இந்த முடிவை எதிர்த்து அனில் அம்பானி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ரேவதி மோகிதே தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், வங்கியின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனில் அம்பானியின் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்திய முடிவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக கனரா வங்கி தரப்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அனில் அம்பானியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement

Related News