தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.68.2 கோடிக்கு போலி வங்கி உத்தரவாதம்; அனில் அம்பானி உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. அவர் ரூ.17,000 கோடி வரை பணமோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.  இதுதொடர்பாக அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள அனில் அம்பானியின் வீடு அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய 35க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். அனில் அம்பானி கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

Advertisement

மேலும், இதுதொடர்பான வழக்கில், ஒடிசாவை தளமாக கொண்டு செயல்படும் பிஸ்வால் டிரேட்லிங்க் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்த சாரதி பிஸ்வால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் என்யுபிஇஎஸ்எஸ் லிமிடெட் சார்பாக, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டுக்கு கொடுத்த ரூ.68.2 கோடிக்கான போலி வங்கி உத்தரவாதம் அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் பால் என்பவரை பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அசோக் குமார் பால் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை இரண்டு நாள் அமலாக்கத்துறை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

Related News