தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்: உடனே திறக்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் ஊராட்சியில், கட்டிமுடிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதிகளின்றி, காட்சிப்பொருளாக கிடக்கும் அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி வசந்த் நகரில் அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 2015-2016ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அப்போதைய எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் ரூ.6.50 லட்சம் நிதியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும், இக்கட்டிடத்தில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் சமூக விரோதிகள் சிலர் இரவு நேரத்தில் அங்கன்வாடி கட்டிடத்தில் குடித்துவிட்டு, மதுபாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், அக்கட்டிடம் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தைச் சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மேலும், சமீபத்தில் பெய்த மழையால் அங்கன்வாடி மையத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், நோய்பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Related News