தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி மைய வாசலில் சூனியம் வைத்ததாக மக்கள் பீதி: கீரப்பாக்கத்தில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: அங்கன்வாடி மைய வாசலில் சூனியம் வைத்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் கீரப்பாக்கம் ஊராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு விநாயகபுரம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது.

Advertisement

இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அங்கன்வாடி மைய வாசலில் மர்ம ஆசாமிகள் சூனியம் வைத்து சென்றதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், ‘’அங்கன்வாடி மைய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் புகுந்து வாசலில் இலுப்பை, எலுமிச்சம் பழம் மீது மஞ்சள் குங்குமம், வேப்பிலை ஆகியவற்றை வைத்து சூனியம் செய்துள்ளனர். மறுநாள் காலை அங்கன்வாடி மையத்தை திறக்கவந்தபோது ஆசிரியர் மற்றும் பெற்றோர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் ஊர் முழுவதும் தீபோல் பரவியதால் பீதியடைந்துள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News