தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்: நெல்லை அருகே அதிர்ச்சி

நெல்லை: நெல்லை அருகே நான்கு பேர் மட்டுமே வசிக்கும் அங்கன்வாடி பணியாளரின் வீட்டுக்கு, மின் கட்டணமாக ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 ரூபாய் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உப கோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சேபா, அங்கன்வாடி பணியாளர். கணவர் இறந்த நிலையில் தனது 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வழக்கம்போல் மின் கட்டண விபரம் வந்துள்ளது. அப்போது சேபா தனது செல்போனில் மின் கட்டணத்தை செலுத்த முயன்ற போது, அதில் காட்டப்பட்ட தொகையைக் கண்டு நிலைகுலைந்து போனார். காரணம், மின் கட்டணமாக ரூ.1 கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம் பயன்படுத்திய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா என அதிர்ச்சியடைந்த சேபா, உடனடியாக இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதையடுத்து மூலக்கரைப்பட்டி பிரிவு அலுவலக அதிகாரிகள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். கோளாறு சரிசெய்யப்பட்டு மின் அளவு திருத்தம் செய்து, சரியான மின் அளவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி, மின் நுகர்வோர் இணைப்பிற்கு ரூ.494 என மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் தரப்பில், ``அதிகப்படியான மின் கட்டணம் வந்துள்ளது உண்மைதான். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மனிதத் தவறு காரணமாக இது நிகழ்ந்துள்ளது. இந்தத் தவறு சரி செய்யப்பட்டு, சரியான கட்டணம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் மின்வாரியத்தில், அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலம் மின் கணக்கீடு செய்யும் பணி நடைபெறுகிறது. அப்போது ஏற்பட்ட தவறின் காரணமாக இந்த குளறுபடி நிகழ்ந்திருக்கலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement