தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்கள் தொகை கட்டுப்பாட்டால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்: ஆந்திர முதல்வர் கவலை

Advertisement

திருமலை: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மக்கள் தொகை கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாம் தோற்றோம். இப்போது நாம் மக்கள்தொகை வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். 3 குழந்தைகளுக்கு மேல் இருக்கும்போதுதான் உண்மையான தேசபக்தி இருக்கும். எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தல்லிக்கு வந்தனம் திட்டத்தில் கல்வி உதவித்தொகை ரூ.13 ஆயிரம் வழங்கப்படும். மக்கள்தொகை வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். மக்கள் தொகை என்பது பிரச்னை இல்லை. அது நாட்டின் சொத்து. மக்கள்தொகை வளர்ச்சி பற்றி அனைவரும் பேச வேண்டும்.

தென்னிந்தியாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற கவலை உள்ளது. அதற்கு காரணம் மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள்தான். ஒரு காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு என்று சொன்னோம். ஆனால் இப்போது மக்கள் தொகை மேலாண்மை என்று சொல்கிறோம். கூட்டுக் குடும்பங்கள் மீண்டும் வர வேண்டும். பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க திட்டங்கள் கொண்டு வரப்படும். மக்கள் தொகை நமக்கு ஒரு பெரிய சொத்து. தற்போது பல நாடுகளில், முதியவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இனிமேல், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்திற்காக மக்கள் தொகை மேலாண்மைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Advertisement

Related News