தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் வினோத திருவிழா 800 அடி உயர மலையில் தடிகளால் அடிக்கும் விழாவில் 2 பேர் பலி: 100 பேர் காயம்

திருமலை: ஆந்திராவில் 800 அடி உயர மலையில் உள்ள மாலா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடந்த தடியால் அடிக்கும் சம்பிரதாய ஊர்வலத்தில் 2 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹோலசகுண்டா அடுத்த தேவரகட்டுவில் உள்ள 800 அடி உயர மலையில் மாலா மல்லேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி (தசரா) நாளில் பன்னி திருவிழா நடத்தப்படுகிறது.

Advertisement

இந்த திருவிழா ஊர்வலத்தில் 3 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒரு தரப்பிலும், 7 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றொரு தரப்பிலும் சுவாமி சிலைகளை சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக கம்புகளுடன் திரண்டு சம்பிரதாயத்துக்காக சண்டையிடுவார்கள். இந்த வினோத திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டின் பன்னி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

இதில் சுவாமி சிலைகளை எடுத்துச்செல்ல போட்டிபோடுவதுபோல் தடிகளால் சம்பிரதாயத்துக்காக சண்டை போட்டுக்கொண்டே சென்றனர். இதனால் பலர் காயம் அடைந்தனர். அந்த இடம் ரத்தகளறியாக மாறியது. பின்னர் சுவாமி சிலைகள் பசவன்னகூடுவை அடையும்போது சண்டை நிறுத்தப்பட்டது. இந்த சம்பிரதாய உற்சவ மோதலில் 2 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் அதோனி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement

Related News