தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் போலி மதுபான விற்பனையில் தொடர்பு தெலுங்கு தேசம் நிர்வாகிகள் 2 பேர் சஸ்பெண்ட்: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின்பேரில் அதிரடி

திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், முலகலசெருவு பகுதியில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன் போலி மதுவிற்றதாக சிலரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் நடத்திய சோதனையில் கதிரிநாட்டுனிகோட்டா கிராமத்தில் போலி மதுபான உற்பத்தி ஆலை இருப்பதை கண்டனர். அங்கு போலி மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 14 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.

Advertisement

போலீசார் விரட்டிச்சென்று 10 பேரை பிடித்தனர்.

மேலும் பல்வேறு பிராண்டுகளின் போலி லேபிள்கள் மற்றும் போலி மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், அத்தேபள்ளி ஜனார்தன்ராவ் என்பவரது தலைமையில் போலி மதுபானம் உற்பத்தி செய்வதும், அவற்றை பெத்ததிப்பசமுத்திரம், பெத்தகல்லு பகுதியில் விற்பனை செய்துள்ளனர். மதுபானம் தயாரிப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர், ஒடிசாவை சேர்ந்த ஒருவர் ஈடுபட்டுள்ளனர். போலி மதுபானங்கள் ராஜேஷ் என்பவரின் வாகனத்தில் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் கலால் அமைச்சர் கொல்லு ரவீந்திரா, கலால் முதன்மை செயலாளர் முகேஷ்குமார் மீனா, அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல்தேவ்சர்மா மற்றும் கலால் ஆணையர் தர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலி மதுபான வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜனார்தன்ராவ் வெளிநாட்டில் பதுங்கியுள்ளார். மேலும் கோட்டராஜு, ராஜேஷ், னிவாசராவ் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். போலி மதுபான உற்பத்திக்கு தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த தாசரிபள்ளி ஜெயச்சந்திரரெட்டி, கட்டா சுரேந்திரநாயுடு ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

முழுமையான விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், போலி மதுபான தயாரிப்பு வழக்கில் தொடர்புடைய தாசரிபள்ளி ஜெயச்சந்திரரெட்டி, கட்டா சுரேந்திரநாயுடு ஆகியோரை தெலுங்குதேசம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜெயச்சந்திரரெட்டி தம்பல்லப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement