தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆந்திராவில் நடந்த ஜில்லா பரிஷத் இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி சொந்த ஊரில் டெபாசிட் இழந்த ஒய்எஸ்ஆர் காங். கட்சி: 6,735 வாக்குகள் பெற்று தெலுங்கு தேசம் வெற்றி

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த தொகுதியான புலிவேந்துலாவில் கடந்த 11ம் தேதி ஜில்லா பரிஷத் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டெபாசிட் இழந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6,735 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹேமந்த் ரெட்டி 685 வாக்குகளை மட்டுமே பெற்று தொகுதியில் டெபாசிட்டை இழந்தார். சொந்த தொகுதியில் டெபாசிட்டை இழந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குறித்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்கிறார்கள்.

இதையடுத்து வெற்றி பெற்ற மாரெட்டி லதா ரெட்டி தேர்தல் அதிகாரியிடமிருந்து அதிகாரப்பூர்வ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். இதற்கிடையே இந்த தேர்தல் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ராஜசேகர் ரெட்டி முதல்வரான பிறகு புலிவெந்துலா தொகுதியில் ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டது.தற்போது ஜில்லா பரிஷத் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றது என்றார்.

Related News