தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல் வீசிய வழக்கில் 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

Advertisement

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 3 தினங்களுக்கு முன்பு விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபரால் கல் வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஜெகன் மோகன் நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக, ஜெகன் மோகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஜெகன் மோகனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த எம்.எல்.ஏ. ஒருவரும் காயமடைந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விஜயவாடா போலீசார், கல் வீசிய மர்ம நபரை பிடிப்பதற்காக 6 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாத நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஆந்திர போலீஸ் அறிவித்தது. தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விஜயவாடா அருகே உள்ள சிங் நகர் பகுதியை சேர்ந்த முக்கிய குற்றவாளி சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். தரையில் பதிக்க பயன்படுத்தப்படும் டைல்ஸ் துண்டை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது வீசியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. கைதான சதீஷ் குமார் மற்றும் ஆகாஷ், துர்கா ராவ் , சின்னா, சந்தோஷ் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல் வீசியவர்களை 3 நாட்களுக்கு பின் ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்திருந்த நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Related News