ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்!
இந்நிலையில், ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். முன்னதாக கடந்த 22ம் தேதி முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சார்பாக புலிவெந்துலா தொகுதியை சேர்ந்த உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.