தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னாள் எம்பி வீட்டை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் கட்சியினர்

Advertisement

*கல் வீசி தாக்குதலில் கார் கண்ணாடி உடைப்பு

திருமலை : ஆந்திர மாநிலம் சித்தூர் மக்களவைத் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி ரெட்டப்பாவை புங்கனூரில் உள்ள அவரது வீட்டில் பார்க்க ராஜம்பேட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி மிதுன் ரெட்டி நேற்று சென்றார். அப்போது திடீரென முன்னாள் எம்பி ரெட்டப்பாவின் வீட்டை தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டனர்.அப்போது இருகட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி கொண்டனர். இதில் பலர் காயமடைந்த நிலையில் முன்னாள் எம்பி ரெட்டப்பா கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கலவரத்தை தடுக்க முயன்றனர். மேலும் பதற்றமான சூழ்நிலையில் போலீசார் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருகட்சியினரிடை ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கல் வீசி தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் எம்பியுடன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் கார் எரிக்கப்பட்டது. இதனையடுத்து கூடுதல் எஸ்பி வாகனத்தில் எம்பி மிதுன் ரெட்டி பாதுகாப்பாக திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனிதா நிருபர்களிடம் பேசுகையில், ‘தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜனசேனா பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிக நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை வழங்கி உள்ளனர்.

எனவே தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் எவ்வளவு பகை இருந்தாலும் சட்டபூர்வமாக கையாள வேண்டும். வன்முறையை கையாள வேண்டாம். வன்முறையை தொடர்ந்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். வன்முறையில் ஈடுபட்டால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement

Related News