தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திரா கிராமத்தில் 30 பேர் அடுத்தடுத்து சாவு: புதிய வகை வைரஸ் காரணமா?

திருமலை: ஆந்திராவில் குண்டூர் அருகே உள்ள கிராமத்தில் கடந்த 5 மாதங்களில் அடுத்தடுத்து 30 பேர் பலியான நிலையில், புதிய வகை வைரஸ் காரணமா? என்பது உள்ளிட்ட கோணங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துரக்கபாலம் கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 5 மாதங்களில் சுமார் 30 பேர் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த மருத்துவ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக துரக்கபாலம் கிராமத்தில் முகாமிட்டு வீடுவீடாக பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

‘கிராமத்தில் முகாம் அமைத்து அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர மேலும் சில பரிசோதனைகளும் செய்து வருகிறோம். கிராமத்தில் உள்ள குடிநீரை ேசாதனைக்கு அனுப்பியுள்ளோம். அவற்றின் முடிவுகள் வந்தபிறகே முழு காரணம் தெரியவரும். கடந்த 5 மாதங்களில் நோய்வாய்ப்பட்டு சிலர் இறந்ததாக பொதுமக்கள் கூறினர். இதற்கு கொசுக்கடி காரணமா? அல்லது புதிய வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் காரணமா? எனவும் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இறந்தவர்களில் சிலர் மலிவு விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை குடித்ததாக கூறுகின்றனர். இதுதொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம்’ என்றனர்.

Advertisement

Related News