தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் நள்ளிரவு விபத்து புதிதாக வாங்கிய கார் பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதி 3 பேர் பரிதாப பலி

*தோழியுடன் வந்த வாலிபர் படுகாயம்
Advertisement

திருமலை : ஆந்திராவில் கார் வாங்கிய மறுநாள் நள்ளிரவு அதை ஓட்டியவர் அடுத்தடுத்து பைக்குகள் மீது மோதியுள்ளார். இதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். காரை ஓட்டிவந்தவர் மற்றும் அவரது தோழி காயமடைந்தனர்.ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் உள்ள ஆர்டிசி பஸ் நிலையம் வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவு புதிய கார் ஒன்று வேகமாக சென்றது. முன்னால் சென்ற வாகனங்களை ஓவர்டேக் செய்தபடி சென்ற அந்த கார், யாரும் எதிர்பாராத வகையில் அவ்வழியாக வந்த 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் சாலையின் தடுப்புச்சுவற்றின் மீது மோதிவிட்டு பல்டி அடித்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற பேராஜூப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்(32), காக்கிநாடா அவசரல் வீதியை சேர்ந்த லட்சுமணன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அவர்களுக்கு பின்னால் மற்றொரு பைக்கில் வந்த துர்காபிரசாத் (32) என்பவர் படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் காரை ஓட்டி வந்த ராமகிருஷ்ண ரவுப்பேட்டையை சேர்ந்த சல்லா ராம்மோகன்(29), காரில் வந்த அவரது தோழி வெங்கடா நகரைச் சேர்ந்த பத்மா ஆகியோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மூன்றாவது நகர போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ராம்மோகனையும், பத்மாவையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புதிய கார் வாங்கிய மறுநாளில் தனது தோழியுடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.

விபத்துக்குள்ளான காரில் இருந்து மதுபாட்டில்கள் சாலையில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் போலீசார் தெரிவித்தனர். காரை ஓட்டியவர் குடிபோதையில் அதிவேகத்தில் ஓட்டி வந்ததால் விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். சம்பவ இடத்தை காக்கிநாடா டிஎஸ்பி ஹனுமந்த ராவ், மூன்றாம் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணபகவான் மற்றும் போலீசார் ஆய்வு செய்து கிரேன் மூலம் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மதுபோதையில் ராம்மோகன், பைக்குகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினாரா? என அவரை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News