தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவில் குடும்பத்தினர் கண்ணெதிரே சோகம் டிபன் கடைக்குள் கல்லூரி பஸ் புகுந்து 12 வயது சிறுவன் பலி

*5 பேர் படுகாயம்: கார், 4 பைக்குகள் சேதம்
Advertisement

திருமலை : ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி டிபன் கடைக்குள் புகுந்ததில் 12 வயது சிறுவன் குடும்பத்தினர் கண்ணெதிரே உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். கார், 4 பைக்குகள் சேதமானது.ஆந்திர மாநிலம் பெந்துருத்தியில் ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை உறவினர்களுடன் கொண்டாடினர். பின்னர் நேற்று பித்தாபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காசிங்கோட்டா மண்டலம் பையாவரத்தில் சாலையோரத்தில் உள்ள டிபன் கடையில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்தி அனைவரும் கிழே இறங்கினர்.

அப்போது அவ்வழியாக வந்த அனகாபள்ளியில் உள்ள தனியார் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் சாலையோரம் இருந்த 4 பைக்குகள், கார் மீது மோதிவிட்டு டிபன் கடைக்குள் பஸ் புகுந்தது. இதில் காரில் இருந்து இறங்கிய 12 வயது சிறுவன் கவுஸ் குடும்பத்தினர் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் அங்கிருந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காசிங்கோட்டை போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு அனகப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஒப்படைத்தனர். இதுதொடர்பாக காசிங்கோட்டை இன்ஸ்பெக்டர் வினோத்பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement