தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அன்புமணி பெயரில் கொலை மிரட்டல்: ராமதாசின் தனி செயலாளர் டிஜிபியிடம் புகார்

சென்னை: அன்புமணி பெயரில் மர்ம நபர்கள் தனக்கும், குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக டிஜிபியிடம் ராமதாசின் தனி செயலாளர் புகார் மனு கொடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசின் தனி செயலாளர் சுவாமிநாதன், தமிழக டிஜிபியிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், சென்னை, பாலவாக்கம், அண்ணா சாலை முகவரியில் கடந்த ஒரு வருடமாக என் மனைவி, மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வருகிறேன். பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசின் தனி செயலாளராக உள்ளேன். ராமதாஸ், அன்புமணி இடையே அரசியல் பிரச்னை குறித்து தவறான புரிதல் இருக்கிறது. இதனால் போட்டியாக தனது அரசியல் நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 15ம் தேதி இரவு 8.15 மணியளவில் நான் என் மனைவி மற்றும் மகனுடன் பாலவாக்கம் கடற்கரையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்து, ராமதாசுக்கு உதவ வேண்டாம். உங்கள் மனைவி மற்றும் மகனின் வாழ்க்கை முக்கியம் என்றால் ராமதாசை விட்டு வெளியேற வேண்டுமென என்னை மிரட்டினர். அவர்களிடம் நீங்கள் யார், ஏன் இந்த மிரட்டல் விடுக்கிறீர்கள் என்று அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது அன்புமணி பெயரில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அன்புமணி, சவுமியா பெயரில் சதித் திட்டம் நடப்பதாக நான் சந்தேகிக்கிறேன். மேலும் ராமதாசின் தனி செயலாளர் பதவியில் இருந்து என்னை வெளியேற்றும் தீயநோக்கில் சிலர் செயல்படுகின்றனர். எனவே மிரட்டல் விடுத்தவர்கள் மற்றும் அன்புமணி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது உயிர் மற்றும் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

Related News