தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி நடைபயணம் காடுவெட்டி குரு பெயரை கூறுமாறு கட்சியினர் கூச்சல்

உளுந்தூர்பேட்டை: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இதனிடையே அன்புமணி தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு நடைபயணத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கினார். மயிலம், விக்கிரவாண்டி, விழுப்புரம் தொகுதிகளில் நடைபயணத்தை முடித்த அன்புமணி 2வது நாளாக நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் தொகுதிகளில் உரிமை மீட்பு நடைபயண பிரசார கூட்டங்களில் பங்கேற்றார்.

Advertisement

உளுந்தூர்பேட்டையில் கடைவீதி பகுதியில் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் பகுதியில் அன்புமணி பேசுகையில், நான் நடுவன் அரசு அமைச்சராக இருந்தபோது போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்தேன். என்னிடம் மாபியா கும்பல் 2000 கோடி வரை தருவதாக பேரம் பேசினார்கள். அதற்கெல்லாம் அசையாதவன் இந்த அன்புமணி என்றார். முன்னதாக பேரணியாக சென்றபோது கடைவீதியில் நின்ற அரசு பேருந்துகளை சிலர் ஓங்கி அடித்ததால் அன்புமணி டென்ஷன் ஆனார். அப்போது அவருக்கு எதிரே இருந்த இளைஞர்கள் சிலர் காடுவெட்டி குரு பெயரை கூறுமாறு கூச்சல் எழுப்பினர். அதனை அவர் கண்டுகொள்ளாமல் அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News