அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் ஆஜராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு!
01:26 PM Aug 08, 2025 IST
சென்னை: அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், கட்சியின் நலன் கருதி இருவருடனும் தனியாக பேச வேண்டும் என நீதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு, தனது அறையில் ஆஜராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விடுத்துள்ளார்.