தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அன்புமணி தான் பாமக தலைவர்.. உரிய விசாரணைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்!!

டெல்லி: டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக இரண்டாக பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது. பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக உள்ள ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், பாமக கட்சியின் முன்னாள் தலைவர் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இருந்து ஒரு கடிதம் அன்புமணி ராமதாசுக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், அன்புமணி ராமதாஸை பாமக கட்சியின் தலைவராக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி இருப்பதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்து இருந்தார். இது பாமக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது. பாமக எம்.எல்.ஏ. அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர் ஆகியோர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை இன்று காலை சந்தித்தனர். அப்போது, தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவுக்கு கட்சி அங்கீகாரம், சின்னம் ஒதுக்கியிருப்பது ஏற்புடையதல்ல. உரிய நடைமுறை இல்லாமல் அன்புமணிக்கு கடிதம் அளித்தது தவறு; அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மேலும், உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்கவேண்டும் என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Related News