தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி ஆவணம் கொடுத்து கட்சியை அபகரிக்க முயற்சி; அன்புமணி மீது டெல்லி போலீசில் புகார்: சிபிஐ-யிடமும் ராமதாஸ் தரப்பு முறையீடு

புதுடெல்லி: போலி ஆவணம் கொடுத்து கட்சியை அபகரிக்க முயன்றதாக அன்புமணி ராமதாஸ் மீது டெல்லி காவல்துறையில் ராமதாஸ் தரப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா, ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது;

Advertisement

இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தார். இதனிடையே, ‘கட்சியில் இதே குழப்ப நிலை நீடித்தால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்க நேரிடும்’ என தலைமை தலைமைத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘பாமக பொதுக்குழு நடைபெற்றதாகக் கூறி போலியான ஆவணங்களை அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்; எனவே இந்த மோசடி தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுமட்டுமின்றி சிபிஐ இயக்குனரையும் நேரில் சந்தித்த ஜி.கே.மணி, போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அன்புமணி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் புகார் மனு அளித்துள்ளதால், பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News