தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரூ.3.15 கோடியில் பக்தர்கள் ஓய்வு மண்டபம்: கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு

Advertisement

ஆனைமலை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான,பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்,கேரள மாநிலத்திலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதிலும், அமாவாசை உள்ளிட்ட முக்கிய விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த கோயிலில் கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 13 ஆண்டுகளை கடந்ததால்,ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், கும்பாபிஷேக விழா நடத்த, கோயில் விமானம் மற்றும் ராஜகோபுர திருப்பணியானது, கடந்த இரு மாதத்திற்கு முன்பிருந்து துவங்கி தற்போது பணிகள் தீவிரமாக நடக்கிறது.

இதற்கிடையே, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாக, ரூ.3.15 கோடியில் ‘பக்தர்கள் ஓய்வு மண்டபம்’ கட்டும் பணி அன்மையில் துவங்கியது. இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் மருதமுத்து,தங்கமணி,திருமுருகன்,மஞ்சுளாதேவி உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். மாசாணியம்மன் கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் நடக்கும் பக்தர்கள் ஓய்வு மண்ட கட்டுமான பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

Related News