தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அம்ரூத் குடிநீர் திட்ட குழாய் பதிப்பில் குளறுபடி

*வீணாகும் தண்ணீர்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் பழைய குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு, புதிதாக குழாய்கள் பதிக்கும் அம்ரூத் குடிநீர் திட்டம், கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறைவான ஆட்களை வைத்து மேற்கொள்ளப் படுவதால் இந்த திட்டத்தை, திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது அக்கரஹாரம் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் போதிய ஆழம் தோண்டாமல் பதிக்கப்பட்ட குழாய்கள், ஆங்காங்கே உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. பள்ளிபாளையம் மஜித் பகுதியில் குடிநீர் குழாய்களுக்கு மூடி போடாததால், தினமும் பல்லாயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகி வருகிறது.

கோடையில் ஆற்றில் கிடைக்கும் குறைவான நீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி, சுத்தப்படுத்தி குழாய்கள் மூலம் மக்களுக்கு வழங்கும் நிலையில், அம்ரூத் திட்ட ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால், இப்படி குடிநீர் வீணாகிறது. ஒன்றிய அரசின் திட்டமான இந்த திட்டத்திற்கு பணியாளர்களை அதிகப்படுத்தி, குழாய் பதிப்பு பணியை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.