தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமிர்தா எக்ஸ்பிரஸ்சில் நிரம்பி வழியும் முன்பதிவில்லா பெட்டிகள்

*பரமக்குடி, மானாமதுரை பயணிகள் அவதி

Advertisement

மானாமதுரை : ராமேஸ்வரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வழிந்தன. இதனால் பரமக்குடி, மானாமதுரை பயணிகளுக்கு நிற்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது.திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு தினமும் அமிர்தா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16343) இயக்கப்பட்டது.

இந்த ரயில் கடந்த அக்.17ம் தேதி முதல் ராமேஸ்வரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். மறுமார்க்கமாக (வண்டி எண்: 16344) ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு 2.15 மணிக்கும், மானாமதுரைக்கு 3.05 மணிக்கும், மதுரைக்கு 4.05 மணிக்கும் செல்லும்.

இந்த ரயில் விடப்பட்ட நாள் முதல் கேரளாவில் இருந்து ஏர்வாடி, ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் முன்பதிவில்லாத பெட்டி கடந்த இருவாரங்களாக நிரம்பி காணப்படுகிறது.

நேற்று ராமேஸ்வரத்தில் நான்கு முன்பதிவில்லாத பெட்டிகளும் ஓரளவு நிரம்பி நிலையில் ராமநாதபுரம் வந்ததும் முழுமையாக நிரம்பியது. கழிப்பறை இடையே உள்ள சிறிய இடத்தில் கூட பயணிகள் முண்டியடித்து ஏறினர். பரமக்குடி, மானாமதுரையில் ஏறிய பயணிகளுக்கு நிற்க கூட இடமில்லாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து ரயில்பயணி ராஜசேகர் கூறுகையில், அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து காலை 9.45 மணிக்கு ராமேஸ்வரம் வருவதற்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1.30 மணிக்கு மதுரை செல்வதற்கும் வசதியான நேரத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் அனைவரும் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் வரை நிரம்புகிறது, என்றார்.

Advertisement

Related News