தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டம்

சென்னை: அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எதைச் சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி பொய்தான் சொல்வார். பழனிசாமியின் முகம் வாடியுள்ளது; அவரை அப்படியே விட்டு விடுங்கள். 2011 டிசம்பரில் நான் உள்பட சிலர் கட்யில் இருந்து நீக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. சசிகலா பெங்களூரு சென்ற பிறகே அனைவரும் சேர்ந்து என்னை கட்சிக்குள் கொண்டு வந்தனர். எடப்பாடி உள்ளிட்டோர் சேர்ந்துதான் என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமிக்க கூறினர். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை, சசிகலா கூறியதால் போட்டியிட்டேன்.

Advertisement

முதலமைச்சர் பதவிக்கு நான் நிற்பேன் என எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்தது. மற்றவர்களை முதலமைச்சராக்கக் கூடிய இடத்தில் இருந்தேன். எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் பலர் முதலமைச்சராக்க ஒப்புக் கொள்ளாமல் தப்பி ஓட முயற்சித்தனர், அவர்களை பாதுகாத்துதான் பழனிசாமியை முதலமைச்சராக்கினோம். அதிமுகவுக்கோ, பழனிசாமிக்கோ வாக்கு கேட்பேன் என நான் கூறவில்லை. அமமுகவும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக செல்ல முடியாது. என்.டி.ஏ. கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவரை ஏற்க மாட்டோம்.

எடப்பாடி பழனிசாமி தன்னைப் பார்க்கவே தயங்குவார். எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செல்ல வேண்டும் என்பது தற்கொலைக்குச் சமம். எடப்பாடி டெல்லியில் பென்ட்லி காரில் யாருடன் சென்றார் என்பது எனக்கு தெரியும். கூட்டணியில் பழனிசாமிதான் முடிவெடுப்பார் என நயினார் கூறியதால் வெளியேறிவிட்டோம். என்று கூறினார்.

Advertisement