தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமித் ஷாவின் தலையை வெட்ட வேண்டும்: சர்ச்சை பேச்சால் திரிணாமுல் பெண் எம்பி மீது வழக்கு

 

Advertisement

ராய்பூர்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது சட்டீஸ்கரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் வங்கதேச நாட்டினர் ஊடுருவுவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசுதான் காரணம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், எல்லைப் பாதுகாப்பு என்பது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்றும், ஊடுருவல் நடந்தால் அதற்கு மாநில அரசைக் குறை சொல்ல முடியாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, ‘எல்லைகளை யாரும் பாதுகாக்கவில்லை என்றால், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மீது கண் வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் தினமும் இந்தியாவிற்குள் வந்து நமது நிலத்தை அபகரிக்கிறார்கள் என்றால், முதலில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையை வெட்டி மேசையில் வைக்க வேண்டும்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்காக மஹூவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு பாஜக தலைவர்களும், ஒன்றிய அமைச்சர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலம், ராய்பூரில் உள்ள மனா காவல் நிலையத்தில் உள்ளூர்வாசி ஒருவர் அளித்த புகாரின் பேரில் மஹூவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 196 (மதம், இனம், பிறந்த இடம் போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்த்தல்) மற்றும் 197 (தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான குற்றச்சாட்டுகள்) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement