தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமித்ஷாவின் கனவு பகல் கனவாகும்: வைகோ திட்டவட்டம்

திருச்சி: திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் மாநாடு நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொது செயலாளர் வைகோ பேசியது:

Advertisement

திமுகவினரோடு பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். முதல்வர் ஸ்டாலின், அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என சிலர் விவாதிக்கிறார்கள். 2026 தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக தனி பெரும்பான்மை பெறும் என்பதை இந்த மாநாட்டில் பிரகடனம் செய்கிறேன்.

திராவிட இயக்கங்களின் கொள்கைகளை காக்க, அண்ணா, கலைஞரின் லட்சியங்களை வென்றெடுக்க நாம் போராடுவோம். திமுகவை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறார். என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் இவ்வாறு பேசுவீர்கள். அமித்ஷாவின் கனவு பகல் கனவாகும். அது ஒரு போதும் பலிக்காது. இவ்வாறு வைகோ பேசினார்.

மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழக மக்களின் பேராதரவோடு வெற்றி வாகை சூடிட மதிமுக பணியாற்றும். எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதும் கண்டனத்துக்குரியது. இந்த செயல்களுக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட்டு அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Related News