தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் பலி: தனியாக தவிக்கும் சிறுவனுக்கு குவியும் நிதியுதவி

ஹூஸ்டன்: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி, மகள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அரவிந்த் மணி(45). கணினி பொறியாளரான இவரது மனைவி சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரதீபா அரவிந்த்(40). இருவரும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் லியான்டர் பகுதியில் மகள் அன்றில் அரவிந்த்(17) மற்றும் மகன் ஆதிர்யன்(14) ஆகியோருடன் வசித்து வந்தார்.
Advertisement

ரூஸ் உயர்நிலை பள்ளியில் படித்த அன்றில் அரவிந்த் டல்லாஸ் பல்கலை கழகத்தில் கணினி அறிவியல் பட்டப் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார். இதனால் தன் மகளை பல்கலை கழகத்தில் சேர்க்க அரவிந்த் மணி, பிரதீபா அரவிந்த் இருவரும் கடந்த புதன்கிழமை(ஆக.15) காரில் சென்றனர். இவர்கள் சென்ற கார் லம்பாசஸ் கவுன்டி பகுதியில் எதிர்திசையில் வந்த கார் ஒன்று டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடி, மீடியனை தாண்டி அரவிந்த் மணியின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு கார்களும் நொறுங்கியது. அரவிந்த் மணி, பிரதீபா அரவிந்த் மற்றும் அன்றில் அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த 2 பேரும் பலியாகினர். சாலை விபத்தில் பெற்றோரை இழந்து உதவ யாருமின்றி ஆதிர்யன் தனியாக விடப்பட்டுள்ளான். இந்த செய்தியை அறிந்த தன்னார்வலர்கள் பலர் சிறுவனுக்கு உதவ இணையதளங்கள் மூலம் ரூ.5.87 கோடி நிதி திரட்டி உள்ளனர். இந்த சம்பவம் சோகம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement