தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்தி தீ வைப்பு: 4 பேர் பலி, 8 பேர் காயம்

மிச்சிகன்: அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் டிரக்கை ஓட்டிச் சென்று புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி தீ வைத்ததில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. வடக்கு கரோலினா, டெக்சாஸ் மாகாணங்களைத் தொடர்ந்து, மூன்றாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. மிச்சிகன் மாகாணம், கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் கடந்த 28ம் தேதி காலை 10.25 மணியளவில் ஞாயிறு சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.

Advertisement

அப்போது ஒருவர் பிக்கப் வாகனத்தால் தேவாலயத்தின் முன்பக்க கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தார். பின்னர், தன்னிடமிருந்த அதிநவீன துப்பாக்கியால் அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். அத்துடன், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் போன்ற எரிபொருளை ஊற்றி தேவாலயத்திற்கு தீ வைத்தார். தகவலறிந்து சில நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர், அண்டை நகரமான பர்ட்டனை சேர்ந்த தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். மேலும் 8க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீ விபத்தில் தேவாலயம் முற்றிலும் சேதமடைந்தது.

Advertisement