தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சிபுரத்தில் பறவைகளால் தாக்கப்பட்ட அமெரிக்கன் பான் ஆந்தை மீட்பு: தீயணைப்பு துறையினர் நடவடிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பறவைகளால் தாக்கப்பட்ட இதய வடிவிலான முகம் கொண்ட அமெரிக்கன் பான் ஆந்தையை, தீயணைப்பு மற்றும் மீட்பு படை துறையினர் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கழுகு போன்ற பறவைகளால் தாக்கப்பட்ட பறவை ஒன்று பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், பறவைகளால் தாக்கப்பட்டு, பறக்க இயலாமல் இருந்த இதய வடிவம் கொண்ட ஆந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Advertisement

இந்த, ஆந்தை குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் கூறுகையில், ‘உடலின் மேல் பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும், அடிப்பகுதி தூய வெள்ளை நிறத்திலும் கருப்புப் புள்ளிகளுடன் காணப்படும் இந்த ஆந்தை வகைகள் அமெரிக்க நாட்டை சேர்ந்தவை. உலகிலேயே மிகச் சிறந்த கேட்கும் திறன் கொண்ட உயிரினங்களில் ஒன்றான இந்த வகை ஆந்தை, கும்மிருட்டில் கூட, ஒரு எலி நகரும் சத்தத்தை வைத்து அதைத் துல்லியமாகப் பிடித்துவிடும் ஆற்றலும், சப்தமே இல்லாமல் பறக்கம் தன்மையும் கொண்டது. இந்த ஆந்தையை, கழுகு போன்ற ஏதோ பறவைகள் இறக்கையில் தாக்கியுள்ளன.

அதனால் தான் ஆந்தை பறக்க எவ்வளவு முயற்சித்தும் பறக்க இயலாமல், மற்ற பறவைகளின் தாக்குதலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. இந்த பறவைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது, என்றார். அதனைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட அமெரிக்கன் பான் ஆந்தை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News