தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவின் தடையை தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது இந்திய நிறுவனம்: முதல் முறையாக பகிரங்க அறிவிப்பு

புதுடெல்லி: எச்பிசிஎல்-மிட்டல் எனர்ஜி லிமிடெட் (எச்எம்இஎல்) நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்நாட்டை சேர்ந்த ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்தது.

Advertisement

ரஷ்யாவிலிருந்து சராசரியாக ஒருநாளுக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு அனுப்பப்படும் நிலையில், அதில் 12 லட்சம் பீப்பாய் வழங்குவது தடை செய்யப்பட்ட இந்த 2 நிறுவனங்களாகும். அமெரிக்காவின் தடையை தொடர்ந்து, ரஷ்ய எண்ணெய் கொள்முதலை மறுசீரமைக்க இந்தியாவின் தனியார் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.

அதன்படி, அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) நிறுவனமும் தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் மிட்டல் எனர்ஜி இன்ஸ்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்த கூட்டு நிறுவனமான எச்எம்இஎல் அரசின் கொள்கை மற்றும் சட்டங்களுக்கு இணங்குவதாகவும், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது.

தற்போது ரஷ்ய எண்ணெய்களுடன் இந்திய துறைமுகத்திற்கு வந்துள்ள அதன் அனைத்து கப்பல்களும் தடை விதிமுறைக்கு உட்படாதவை என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தடைக்கு பிறகு ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தியதாக இந்திய நிறுவனம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.

 

Advertisement